செர்டாங், ஜன 17 – ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் முஹிபா உட்பட இதுவரை 9க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீடு ஒன்றை உடைத்து கொள்ளையிட முயன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதோடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் MPV வாகனத்தையும் கொள்ளையடித்திருப்பதாக செர்டாங் OCPD துணை கமிஷனர் ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார். 44 மற்றும் 55 வயதுடைய அந்த இருவரும் பாலகோங் பண்டார் டமாய் பெர்டானாவில் இம்மாதம் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அந்த இருவரில் 44 வயதுடைய சந்தேகப் பேர்வழி இதற்கு முன் 13 குற்றச்செயல் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்திருப்பதாக அன்பழகன் தெரிவித்தார். அவனுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு ஆடவன் இதற்கு முன் 11 குற்றச் செயல் பின்னணிகளை கொண்டிருந்ததாக இன்று செர்டாங் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
ஆடம்பர கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் வீடுகளில் அந்த இருவரும் திருடுவதை அந்த இரண்டு நபர்களும் வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் ஆடம்பர வாகனங்களையும் கொளையிட்டு வந்துள்ளனர். அந்த இருவரும் இதுவரை 9 வீடுகளில் புகுந்து 700,000 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்டிருப்பதாக அன்பழகன் தெரிவித்தார். அவர்களிடமிருந்து வீடு உடைக்கும் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.