Latestமலேசியா

1 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் லஞ்சம் வாங்கிய ஜோகூரைச் சேர்ந்த டத்தோ பண்டார் கைது

ஜோகூர் பாரு, ஜூன் 2 – ஒரு மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் லஞ்சம் வாங்கிய குற்றம் தொடர்பில் ஜோகூரைச் சேர்ந்த முன்னாள் டத்தோ பண்டார் ஒருவரை குளுவாங் கிளையைச் சேர்ந்த MACC அதிகாரிகள் கைது செய்தனர். ஜோகூரிலுள்ள ஊராட்சி மன்றத்தின் முன்னாள் மேயரான 63 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி ஜோகூர் MACC அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நெருக்கமான தகவல் தெரிவித்தன.

2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை டத்தோ பண்டார் பதவியில் இருந்தபோது அந்த ஆடவர் லஞ்சம் பெற்றதன் தொடர்பில் கைது செய்யப்பட்டார். ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள திட்டங்களை அங்கீகரிப்பதற்காக குத்தகையாளர்களிடமிருந்து ஒரு மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேலாக அந்த நபர் கையூட்டு பெற்றதாக கூறப்பட்டது. அந்த ஆடவருக்கு எதிராக ஜோகூர் பாருவிலுள்ள சிறப்பு லஞ்சக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் 12 குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் கீழ் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!