![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/sikall_1716957360.jpeg)
ஈப்போ, மே 29 – கடத்தி வரப்பட்ட 39 மோட்டார் சைக்கிள்களுடன் லைசென்ஸ் இன்றி மதுபானங்களும் பினாங்கு Nibong Tebal லிலுள்ள டயர் கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு 1.35 மில்லியன் ரிங்கிட்டாகும்.
இதன் தொடர்பில் 30 வயதுடைய ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என பேரா சுங்கத்துறையின் இயக்குநர் Datuk Abdul Ghafar Mohamad கூறினார். Sky Team வகையைச் சேர்ந்த அந்த 39 மோட்டார் சைக்கிள்களுக்கான சுங்க வரி எதுவும் செலுத்தப்படவில்லை. அந்த கிடங்கில் 356,383 ரிங்கிட் வரி செலுத்தக்கூடிய 1,325 லிட்டர் மதுபானங்களும் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இம்மாதம் 13 ஆம் தேதி மாலை மணி 3.30 அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சீனாவிலிருந்து கிள்ளான் துறைமுகம் வாயிலாக அந்த மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக Abdul Ghafar தெரிவித்தார். இறக்குமதி செய்ததற்கான அனுமதி எதனையும் அந்த கிடங்கு கொண்டிருக்கவில்லை . முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் கடந்த மூன்று ஆண்டு ஆண்டு காலமாக அந்த மோட்டார்சைக்கிள்கள் விற்கப்படாமலேயே இருந்திருப்பதும் தெரியவந்ததாக அவர் கூறினார்.