சிக் , மே 2 – Sik , Jeneri, kampung Betong கில் தமது வீட்டின் குளியல் அறை கூரையில் தலைக்கு மேல் 4 மீட்டர் நீளமுடைய ராஜ நகம் ஒன்று இருந்ததைக் கண்டு குடும்பமாது ஒருவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். இரவு 10 மணியளவில் குளியல் அறைக்கு சென்றபோது கூரையில் உடும்பு நடமாட்டம் இருப்பதாக அவர் நினைத்தார், பிறகுதான் ராஜ நாகம் இருந்ததை கண்டு அவர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். அவரது குடும்பத்தினர் இது குறித்து உடனடியாக சிக் பொது தற்காப்பு படைக்கு உதவி கோரி தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைக்கப்பெற்ற 10 நிமிடத்திற்குள் அவ்வீட்டிற்கு வந்த பொது தற்காப்பு படையினர் குளியல் அறையின் கூரையில் இருந்த அந்த ராஜ நாகத்தை வெற்றிகரமாக பிடித்தனர். தொடக்கத்தில் அதனை பிடிப்பதில் சிரமத்திற்கு உள்ளானதாகவும் மிகவும் கவனமான வியூகம் கையாளப்பட்டதால்
8 கிலோவைக் கொண்ட அந்த ராஜ நகம் பிடிக்கப்பட்டதாக சிக் வட்டார பொது தற்காப்பு அதிகாரி லெப்டனன் Haisjul Aishah Mohd Napiah தெரிவித்தார். அந்த ராஜ நாகம் பின்னர் பெர்ஹிலித்தான் எனப்படும் வனவிலங்கு மற்றும் பூங்காத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.