கோலாலம்பூர், நவ 2 – தற்போது நாட்டில் பிரபலமாக விளங்கிவரும் கார சார உணவகம் தனது 14 ஆவது கிளையை பினாங்கு ஜூரு அப்துல் சிட்டியில் நவம்பர் 4ஆம் தேதி சனிக்கிழமை திறக்கவிருக்கிறது.
ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மாலை 6 மணியளவில் இந்த உணவகத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவிருக்கிறார்.
பினாங்கில் முதல் முறையாக திறக்கப்படும் கார சார உணவகம் மிட்டாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பொறுப்பில் செயல்படவுள்ளது.
டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் செயல்படும் மிட்டாஸ் ஹோல்டிங்ஸ் ஏற்கனவே தங்க வர்த்தகம், போக்குவரத்து , மறுசுழற்றி போன்ற துறைகளில் வெற்றி கரமாக செயல்பட்டு தற்போது உணவகத் துறையிலும் கால் பதிக்கிறது .
இந்த திறப்பு விழாவில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.