![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-01-Dec-2023-04-07-PM-7112.jpg)
நீலாய், டிச 1 – அனைத்துலக போதைப் பொருள் விநியோக கும்பலை முறியடித்த சுங்க அதிகாரிகள் 15.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 260 கிலோ கெத்தமின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். கோலாலம்பூர் பண்டான் இண்டாவிலுள்ள வீடமைப்பு பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட ஐந்து தோம்புகளில் இருந்த அந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறையின் காண்காணிப்பு பிரிவின் துணை தலைமை இயக்குனர் சசாலி முகமட் தெரிவித்தார். இந்த போதைப் பொருள் இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய முக்கிய சந்தேகப் பேர்வழியான 30 வயதுடைய T . தங்கராஜ் மற்றும் 36 வயதுடைய S . செல்வராஜ் ஆகியோர் தேடப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதோடு சிலாங்கூர் , சிஜாங்காங்கில் விரைவு உணவகத்தின் கார் நிறுத்தும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா கேம்ரி காரின் பின்புற இருக்கையில் 12 கிலோ எடையுள்ள 400,000 ரிங்கிட் மதிப்புடைய மெத்தம்பேட்டமின் (Methamphetamine) போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக சசாலி தெரிவித்தார். இதன் தொடர்பில் வெளிநாட்டு ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். போர்ட்டிக்சன் கடல் வழியாக அந்த போதைப் பொருள் அண்டை நாட்டிற்கு கொண்டுச் செல்வதற்கு திட்டமிடப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.