![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/f0c6183b-ac75-4a45-98d3-e04a2476d076.jpg)
கோத்தா பாரு, மே 25 – பிப்ரவரி மாதம் கூட்டரசு நீதிமன்றம் ரத்துச் செய்த கிளந்தான் ஷரியா கிரிமினல் குற்றங்களின் 16 விதிமுறைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் ஆலோசனையை சமய விவகார அமைச்சு மறுபரிசீலிக்கும். இது தொடர்பாக கிளந்தானில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் அறிக்கைக்காக அமைச்சு காத்திருப்பதாக துணையமைச்சர் டாக்டர் Zulkifli Hasan தெரிவித்திருக்கிறார்.
அந்த ஆலோசனைகளின் முழுமையான அறிக்கை கிடைத்தபிறகு அதனை நாங்கள் மறுஆய்வு செய்வேம். இஸ்லாமிய சமய விவகாரங்கள் மற்றும் ஆட்சியாளர் மாநாட்டின் தேசிய மன்றத்தில் தெரிவிக்கப்படுவதற்கு முன் அந்த ஆலோசனைகள் குறித்து ஆராயப்படும் என Zulkifli கூறினார்.