Latestஉலகம்

16 ஆம் ஆண்டு எடிசன் திரை விருது மேடையில் புலம்பெயர்ந்த தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு

உலகத் தமிழர்களால் இணையதளம் மற்றும் சமூக வலைதளம் மூலமாகவும் வாக்குகள் பெற்று கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரை கலைஞர்களுக்காக நடைபெற்று வரும் எடிசன் திரை விருது எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. அந்நிகழ்வில் பல்வேறு நாட்டு தமிழ் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்கு பிடித்தமான திரை கலைஞர்களுக்கு வாக்குகளை பெற்று விருது வழங்கப்பட உள்ளது.

அந்த நிகழ்வில் இதுவரை புலம்பெயர்ந்த தமிழர்கள் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு மேடை வழங்கிய எடிசன் திரை விருது குழு இவ்வாண்டும் பின்னணி பாடகர்கள், தன்னார்வை இசையமைப்பாளர்கள், நடன மணிகள், குறும்பட தயாரிப்பாளர்கள், OTT தளங்களில் வெளியீடு கண்ட வெப் சீரியஸ்கள் போன்ற புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மேடை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ் திரை உலகிற்கு அவர்களின் பங்களிப்பை ஏற்படுத்தவும், தங்களின் திறமைகளை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்படும் தளமாகவும், இந்த எடிசன் தமிழ் திரை விருது மேடை வாய்ப்பாக இருக்கும் என எடிசன் திரை விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக Red Carpet நிகழ்வை பல்வேறு நாட்டு தமிழர்கள் கண்டுகளிக்கும் விதமாக 148 கார்ப்பரேட் சமூக ஊடகங்கள் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். தொடர்புக்கு +60166167708 வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!