அலோஸ்டார், பிப் 26 – 172,000 ரிங்கிட் மதிப்புள்ள 80 ,000 லிட்டர் டீசல் எண்ணெயை கெடா சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குவாலா நெராங்கிலுள்ள கோட்டா புத்ரா குடிநுழைவு, தனிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு மையத்தில் இரண்டு கொள்கலன் லோரிகளில் அந்த டீசல் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. அவை கண்டுப்பிடிக்காமல் இருப்பதற்காக அதில் அளவுக்கு அதிகமான கருமையான வர்ணம் கலக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான மேல் விசாரணைக்காக 37 மற்றும் 38 வயதுடைய இரண்டு உள்நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு 450,000 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு கொள்கலன் லோரிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கெடா சுங்கத்துறை இயக்குனர் நோர் இசா அப்துல் லத்தீஃப் தெரிவித்தார்.