புத்ராஜெயா, பிப்ரவரி 8 – கடந்தாண்டு தொடங்கி இம்மாதம் ஐந்தாம் தேதி வரையில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து, 1MDB நிறுவனத்துக்கு சொந்தமான, இரண்டு கோடியே 39 லட்சத்து 11 ஆயிரத்து 460 ரிங்கிட் 90 சென் பெருமானமுள்ள சொத்துகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
நீதிமன்ற நடவடிக்கை வாயிலாக, உரிமை பறிப்பு மற்றும் தன்னார்வ அடிப்படையில் அந்த சொத்துகள் மீட்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின், சட்டவிடோரத பணமாற்று தடுப்பு பிரிவு மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக, அந்த சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
அவ்வாறு பெறப்பட்ட சொத்துகளில், சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மற்றும் அவரது மனைவி ஆகியோரிடமிருந்து உரிமை பறிக்கப்பட்ட ஒரு கோடியே 17 லட்சத்து 53 ஆயிரத்து 785 ரிங்கிட் 81 சென் பெருமானமுள்ள சொத்துகளும் அடங்கும்.
அதன் வாயிலாக, 2019-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 1MDB நிறுவனத்துக்கு சொந்தமான, ஈராயிரத்து 903 கோடி ரிங்கிட் பெருமானமுள்ள சொத்துகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.