Latestமலேசியா

2 மில்லியனுக்கும் அதிகமானோர், EPF ‘பிளெக்சிபெல்’ கணக்கிற்கு பணமாற்றம் செய்ய விண்ணப்பம்

பெட்டாலிங் ஜெயா, மே 27 – செழுமை கணக்கிலிருந்து, “பிளெக்சிபெல்” தளர்வு கணக்கிற்கு பணமாற்றம் செய்ய, இம்மாதம் 22-ஆம் தேதி வரை மட்டும், மொத்தம் 28 லட்சத்து 60 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, EPF – ஊழியர் சேம நிதி வாரியம் தெரிவித்துள்ளது.

அது, மொத்தம் 878 கோடி ரிங்கிட் பணத்தை உள்ளடக்கியது என, EPF நடவடிக்கை பிரிவின் தலைமை அதிகாரி சசலிசா ஜைனுடின் தெரிவித்தார்.

அந்த விண்ணப்பங்களில் இதுவரை, 552 கோடி ரிங்கிட்டை உட்படுத்திய விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதையும் சசலிசா சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு ஆகஸ்ட்டு 31-ஆம் தேதி, EPF செழுமை கணக்கிலிருந்து பிளெக்சிபெல் கணக்கிற்கு பணமாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் இறுதி நாளாகும். அதற்கும், விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்காக அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் சசாலிசா தெரிவித்தார்.

குறிப்பாக, EPF இணைய கணக்கு வாயிலாக அதிகமான விண்ணப்பங்கள் செய்யப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!