![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/photo_6206083148807256971_y.jpg)
புதுடில்லி, மே 15 – 200க்கும் மேற்பட்ட விமான பயணங்களின்போது விமான பயணிகளிடம் நகை உட்பட விலை உயர்ந்த பொருட்களை திருடி வந்த ஆடவனை இந்திய போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு முதல் இந்த திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 40 வயது Rajesh Kapoorரை Delhi போலீசார் கைது செய்தனர்.
அண்மையில் வெவ்வேறு விமான பயணங்களின்போது இரண்டு பயணிகளுக்கு சொந்தமான நகைகள் மற்றும் இதர பொருட்கள் திருடுபோனது தொடர்பில் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி பிடிபட்டான்.
மரணம் அடைந்த தனது அண்ணனின் அடையாளத்தை பயன்படுத்தி விமானத்தில் பயணம் செய்துவந்த Rajesh Kapoor உள்நாட்டு பயணச் சேவையில் பயணம் செய்த பெண்கள் மற்றும் வயதானவர்களின் கைப்பையில் இருந்த விலை உயர்ந்த பொருட்கைளை திருடி வந்ததாக தெரிகிறது.
இதற்கு முன் ரயில் பயணிகளிடமும் Rajesh Kapoor திருடி வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பரபரப்பாக விமான பயணிகள் விமானத்திற்குள் ஏறும்போதும் , பயணிகளின் இருக்கைக்கு மேல் பூட்டப்படாமல் வைக்கப்படும் பேக்குகளில் விலை உயர்ந்த பொருட்களை அந்த நபர் திருடிவந்ததாக போலீஸ் துணை ஆணையர் Usha Rangnani தெரிவித்தார்.