![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/Collage-Maker-03-Nov-2023-01-32-PM-6864.jpg)
கோலாலம்பூர், நவ 3 – 2007 ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே மீண்டும் தொடங்கப்படும் தேசிய சேவை பயிற்சி திட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள் என தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இன்று தெரிவித்திருக்கிறது. தேசிய பயிற்சி சேவை திட்டத்திற்கான வயது வரம்பு குறித்து அண்மையில் வெளியான தகவலை தெளிவுபடுத்தும் வகையில் தற்காப்பு அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக தேசிய பயிற்சி திட்டங்களில் பங்கேற்க முடியாமல் போனவர்கள் மற்றொரு நாளில் அவர்கள் பயிற்சியை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
தேசிய சேவை பயிற்சியில் பங்கேற்பதற்கான கூடியபட்ச வயது 35 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயது கட்டுப்பாட்டு புதிது அல்ல. 2003ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய சேவை பயிற்சி சட்டத்தில் பங்கேற்கும் பயிற்சியாளர்கள் 16 மற்றும் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.