கோலாலம்பூர், ஜன 19 – தேசம் ஊடக குழுமத்தின் தோற்றுநர் குணாளன் மணியம் அவர்களின் முயற்சியில், சென்னையில் தேசம் ஊடக அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழா கடந்த டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவில் விருது பெற்றவர்களை அங்கீகரிக்கும் வண்ணம் தேசம் குழுமம் Meet and Greet எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதில், சென்னையில் நடைபெற்ற விழாவில், விருதுகளை பெறாத மலேசியர்களுக்கு தாப்பா நாடாளுமன்ற மற்றும் மஇகாவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் விருதுகளை எடுத்து வழங்கி சிறப்பித்தார் என திரு குணாளன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் தேசம் தனது 15 ஆவது காலாண்டில் கால் பதிக்கும் நிலையில், இந்த வருடமும் 100 விருதுகளுடன் விருது விழா ஒன்று செப்டம்பரில் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சியில் தேசத்தின் புதிய அகப்பக்கமும் டத்தோ ஸ்ரீ எம். சரவணனால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகத்தினர்களுடன் கலைஞர்கள் உட்பட ஏறக்குறைய 60 பேர் கலந்து Meet and Greet நிகழ்ச்சியைச் சிறப்பித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் 8 பேர் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.