கோலாலம்பூர், பிப் 26 – பொதுவாகவே சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், மலேசியர்கள் தானே முன்வந்து பிறருக்கு உதவி செய்வதில் தயாள குணம் படைத்தவர்களே.
அதற்கேற்ப சமீபத்தில் கணவன் – மனைவி தம்பதியர் தங்கள் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு மத்தியில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி காரம் நீட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் எனலாம்.
தனது நீல நிற திருமண ஆடையிலே பள்ளத்தில் விழுந்து கிடைந்த கார் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலமின்றி அந்த தம்பதியர் உதவுவதை சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வரும் காணொளி வழி காண முடிகிறது.
இவர்களின் செயல் மலேசியா நாட்டின் உணர்வையும் வரையறைக்கும் ஒற்றுமை மற்றும் நல்ல குணத்தையும் காட்டுகிறது என்று பலரும் அந்த புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து கூறி பதிவு செய்து வருகின்றனர்