Latestமலேசியா

2030 ஆம் ஆண்டுக்குள் சிறைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க நடவடிக்கை

கோலாலம்பூர், ஏப் 4 – சிறைகளில் கைதிகள் நெரிசல் அதிகமாக இருப்பதால் 2030 ஆம் ஆண்டுக்குள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட தகுதிபெற்ற கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிபிட்ட சில தகுதிகளை நிறைவு செய்யும் கைதிகள் சிறைக்கு வெளியே தண்டணை அனுபவிப்பதற்காக Parole முதல் வசிக்கும் மறுஇணைப்பு திடடத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள் .
PDK எனப்படும் இத்தகைய மறுவாழ் திட்டத்தின் கீழ் 19,269 பேர் இடம்பெற்றுள்ளதாக இவ்வாண்டுக்கான சிறைச்சாலைத்துறையின் புள்ளி விவர தகவல் மூலம் தெரியவருவதாக சிறைசாலைத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ Nordin Muhamad தெரிவித்திருக்கிறார். கைதிகளின் விடுதலை அனுமதி திட்டத்தில் 2,727 பேரும் மேலும் 780 பேர் parole திட்டத்திலும் சிறையிலிருந்து வெளியேறுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!