Latestமலேசியா

214 தனியார் பாலர் பள்ளிகளுக்கு 13.06 மில்லியன் வெள்ளியை மித்ரா வழங்கியுள்ளது

சுங்கை சிப்புட் , டிச 26 –  நாட்டில் அரசு சார்பற்ற இயக்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழி நடத்தி வரும் பாலர் பள்ளிகளில் பயிலும் பி்40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு மித்ரா கடந்த ஆண்டு 13.06 மில்லியன் வெள்ளி வழங்கியுள்ளது

கடந்த காலங்களில் பாலர் பள்ளிகளுக்கு உதவி தொகையாக மாணவர் ஒருவருக்கு நூறு வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இம்முறை அந்த தொகை 100 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாக மித்ராவின் தலைமை இயக்குனர் கே. ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.

சுங்கை சிப்புட்டில் செயல்பட்டு வரும் தடிகா சொமெல் மாஜூ ‘tadika comel maju’ பாலர் பள்ளியின் பரிசளிப்பும் மற்றும் 6 வயது மாணவர்களுக்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்ட அவர் இந்த தகவலைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அரசு சார்பற்ற பாலர் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பி40 பிரிவைச் சேரந்த மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை கடந்த ஆண்டு வழங்கப்பட்டதாக அதற்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு அரசு சார்பற்ற பாலர் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 6100 ஆக இருந்தது, 2022இல் சுமார் 5164 ஆயிரம் மாணவர்களாக இருந்தனர். இன்று அதன் எண்ணிக்கை 4450 பதிவாகியுள்ளது

ஆக ஆண்டுக்கு ஆண்டு பாலர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டு வருவது கவலை அளிப்பதாகவும், அதன் எண்ணிக்கை அதிகரிக்க சமுக இயக்கங்கள் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ரவீந்திரன் நாயர் வலியுறுத்தினார் ..

சுங்கை சிப்புட்டில். உள்ள அம்னோ கட்டடத்தில. உள்ள மண்டபத்தில் நடைபெற்ற மாணவர்கான பரிசளிப்பு விழாவில். பெரும் திரளானோர் கலத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய tadika comel maju பாலர் பள்ளியின் ஆலோசகர் கணேசன் ரத்தனம் , வசதி குறைந்த மாணவர்களின் சுமையை குறைக்க மித்ரா நிதி வழங்கி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் , மாணவர்க்களுக்கு பள்ளி சீருடை மற்றும் பள்ளி உபகரணங்கள வாங்கவும் நிதி ஒதுக்கீட்டையும் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கோரிக்கையை முன் வைத்தார்.

சுங்கை சிப்புட், தாமான் முகிபா ஜெயாவில் செயல் பட்டு வரும் தடிகா சொமெல் மாஜூ பாலர் பள்ளியில் 61 மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். ஐந்து ஆசிரியர்களைக் கொண்டு இந்த பலர் பள்ளி சிறப்புடன செயல்படு வருகிறது.

அடுத்தாண்டுக்கான மாணவர்கள் பதிவும் நடைபெற்று வருவதாகவும் கணேசன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!