Latestஉலகம்

30 நிமிட பயணத்திற்கு, RM5,000 கட்டணம் செலுத்திய பயணி; தாய்லாந்தில் டாக்சி ஓட்டுனருக்கு இன்ப அதிர்ச்சி

பேங்கோக், நவம்பர் 16 – தாய்லாந்தில், வெறும் 30 நிமிட பயணத்திற்கு, பயணி ஒருவர், ஐயாயிரத்து 67 ரிங்கிட் மதிப்பை கொண்ட இரு 500 யூரோ பண நோட்டுகளை டாக்சி ஓட்டி ஒருவருக்கு வழங்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட டாக்சி ஓட்டி, தனக்கு நிகழ்ந்த அந்த இன்ப அதிர்ச்சியை, தாய்லாந்து டாக்சி ஓட்டினர்கள் முகநூல் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அது வைரலாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட பயணியை, டோன் முவாங் (Don Mueang) விமான நிலையத்திலிருந்து, சுவர்ணபூமி (Suvarnabhumi) விமான நிலையத்திற்கு கொண்டு விட, வெறும் 677 பாட் அல்லது 89 ரிங்கிட் ஏழு சென் மட்டுமே கட்டணமாக விதிக்கப்படுவது வழக்கமாகும்.

எனினும், அவசரத்தில் இருந்த அப்பயணி, 30 நிமிடங்களுக்குள் தம்மை சுவர்ணபூமி விமான நிலையத்தில் கொண்டு விட்டால், சிறப்பு தொகையை தருவதாக உறுதியளித்துள்ளார்.

அவர் கேட்டுக் கொண்டதை போலவே, 30 நிமிடத்திற்குள் விமான நிலையத்தை சென்றடைந்த டாக்சி ஓட்டுனர், ஐயாயிரம் ரிங்கிட்டை பெற்றுக் கொண்ட சந்தோச களிப்பில் உள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!