இந்தியா, பிப் 2 – நடிகை பூனம் பாண்டே தனது 32 வயதில் புற்றுநோயால் இன்று காலை காலமாகியுள்ளார்.
மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் பின்னர் சினிமாவில் நடித்து சர்ச்சைக்குரிய நடிகையான பூனம் பாண்டே இன்று கர்பப்பை புற்றுநோயால் இறந்துவிட்டதாக அவரது மேலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் பூனம் பாண்டே.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த நடிகை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நடிகை பூனம் பாண்டே மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.