பத்தாங் காலி, பிப் 12 – ஜாலான் பத்தாங் காளியில் நேற்று மாலையில் நான்கு சக்கர வாகனம் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் ஒரு பெண் மரணம் அடைந்த வேளையில் அவரது நான்கு நண்பர்கள் காயம் அடைந்தனர். மாலை மணி 6.30 அளவில் அவசர அழைப்பு கேட்டு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றபோது 4WD வாகனம் அங்குள்ள பள்ளத்தில் விழுந்து கிடந்ததை கண்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் உதவி இயக்குனர்அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார். வாகனத்தில் சிக்கிக் கொண்ட ஒருவர் 10 நிமிடங்களில் வெளியே மீட்கப்பட்டார். எனினும் 58 வயதுடைய அந்த பெண் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டதோடு காயம் அடைந்த இதர நால்வர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
Check Also
Close