கோலாலம்பூர் , பிப் 25 – நான்கு மாநிலங்களில் உள்ள 12 பகுதிகளில் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என மலேசிய வானிலைத்துறை எச்சரித்துள்ளது. பெர்லிஸ் மற்றும் கெடாவில் பூலாவ் லங்காவி, குபாங் பாசு, கோத்த செட்டார், போகோக் சேனா, பெண்டாங்,படாங் தேராப் சிக், பாலிங் மற்றும் கூலிம் ஆகிய இடங்களில் அதிகப்பட்ச வெப்பநிலையை பதிவு செய்யும் என மலேசிய வானிலைத்துறை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. இது தவிர பேராக்கில் கோலா காங்சார் மற்றும் சபாவில் பியூஃபோர்ட்டிலும் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். இதர அனைத்து இடங்களிலும் தினசரி வெப்ப நிலை கூடியபட்சம் 35 செல்சியல் ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.