Latestமலேசியா

5ஆம் படிவ மாணவன் மாரடைப்பினால் மரணம்

டுங்குன் , மார்ச் 14- உலு டுங்குனில் உள்ள இடைநிலைப் பள்ளியின் மாணவர் விடுதி அறையில் ஐந்தாம் படிவ மாணவன் ஒருவன் மாரடைப்பினால் இறந்து கிடந்தான்.

17 வயதுடைய முகமட் நஸ்லின் ஜஸ்வி என்ற அந்த மாணவன் நேற்றிரவு 9.45 மணியளவில் சுயநினைவின்றி இருந்ததை அவனது பள்ளியின் சக தோழர்கள் கண்டுள்ளனர்.

அந்த மாணவரை உடனடியாக பள்ளி ஆசிரியர் ஒருவர் அருகேயுள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து அதன்பிறகு அங்கிருந்து டுங்குன் பொது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும்படி அந்த ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்பட்டதாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் மைசுரா அப்துல் காடிர் தெரிவித்தார்.

அங்குள்ள மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அம்மாணவன் மாரடைப்புக்கு உள்ளானதால் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!