![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/2695793-700x470.jpeg)
ஷா அலாம், மே 15 – Damansara விலுள்ள வர்த்தக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் பணப் பெட்டியில் இருந்த ஐந்து லட்சம் ரிங்கிட் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை Bukit Aman சட்டப் பிரிவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Hussein Omar Khan தெரிவித்தார்.
அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு Bukit Aman சட்டப் பிரிவு முடிவை எடுக்க முடியும் என அவர் கூறினார். நாங்கள் விசாரணையை முடித்து விட்டோம். விசாரணை அறிக்கையை அரசாங்கத் தரப்பு வழங்கறிஞரான DPPயிடம் சமர்ப்பிப்பதற்கு முன் இதனை Bukit Aman சட்டப் பிரிவு கவனிக்க வேண்டும் என விரும்புவதாக Hussein கூறினார்.
அந்த 5 லட்சம் ரிங்கிட் பணத்தை ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமே உரிமை கோரியுள்ளார், ஆனால் இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான தெளிவான தகவலை அந்த நபரினால் தெரிவிக்க முடியவில்லை என இன்று சிலாங்கூர் போலீஸ் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட பின் Hussein தெரிவித்தார்.
விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் சட்ட பிரிவின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டுச் செல்ல முன்வந்ததற்கு இதுவே காரணம் என அவர் கூறினார். அந்த பணம் தொடர்பில் உரிமை கொண்டாடுவதற்கு வெட்டுமர நிறுவன உரிமையாளர் மட்டுமே முன்வந்துள்ளார். இதுவரை அவரிடமும் இதர எண்மரிடமும் விசாரணையின்போது வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம் என Hussein தெரிவித்தார்.