ஷா அலாம், நவ 9 – 5 சிறுமிகளை மானப்பங்கப்படுத்திய தெக்குவான்டோ பயிற்சியாளர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது. 20 வயதுக்குட்பட்ட அந்த இளைஞனுக்கு எதிராக மானப்பங்கம் தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்படும் என ஷா அலாம் OCPD துணை கமிஷனர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரான 9 வயது சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டான். தெக்குவான்டோ பயிற்சியில் கலந்துகொண்டபோது ஏழு முதல் 11 வயதுடைய ஐந்து மாணவிகளை அந்த பயிற்சியாளர் மானப்பங்கப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டது.