நவ 22 – காஸாவில் கடந்த 6 வாரமாக கடுமையான போர் நிலவி வந்த நிலையில் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் இணக்கம் கண்டுள்ளன.
அந்த வகையில், ஹமாஸ் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலில் பிணை பிடித்தவர்களில் 50 பேரை விடுவிக்கவுள்ளது.
இஸ்ரேலும் 150 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவுள்ளதாக ஹமாஸ் தரப்பு கூறியுள்ளது.
இருப்பினும் இந்த இடைக்கால போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தப்பின் மீண்டும் போர் தொடங்கும் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாவு கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாள் போர் நிறுத்தம் அன்றும் ஹமாஸ் தரப்பு 10 பிணையாளிகளை விடுவிக்க வேண்டும். அப்படி விடுவித்தால் மட்டுமே அடுத்த நாள் போர் நிறுத்தம் தொடரும் என அறியப்படுகிறது.
இந்த இடைக்கால போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட காத்தார் மிகப்பெரிய பங்காற்றியிருப்பதோடு விடுவிக்கப்படவிருப்பவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 3 வயது குழந்தையும் அடங்கும் என நம்பப்படுகிறது.