Latestமலேசியா

50 ,000 ரிங்கிட் போலி பண கோரிக்கை; அரசுத்துறை தலைவர் உட்பட இருவர் தடுத்து வைப்பு

மலாக்கா, பிப் 6 – மலாக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கான விநியோகம் தொடர்பில் 50,000 ரிங்கிட் போலி பணக் கோரிக்கை செய்ததில் உடந்தையாக இருந்ததன் தொடர்பில் அரசுத் துறை தலைவர் மற்றும் ஒரு நிறுவனத்தின் இயக்குனரை மலாக்கா எம்.ஏ.சி.சி அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு நாட்களுக்கு அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவை எம் .ஏ.சி.சி பெற்றது. வாக்குமூலம் பெறுவதற்காக அந்த இரு ஆடவர்களையும் மலாக்கா ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவர்களை தடுத்து வைப்பதற்கு எம்.ஏ.சி.சி அதிகாரி செய்துகொண்ட விண்ணப்பத்தை மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி அனுமதித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!