லண்டன், டிச 6 – பிரிட்டனில், ஆடவர் ஒருவர் 59 முறை ஓட்டுநர் உரிமத்துக்கான எழுத்துபூர்வத் தேர்வில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
இருப்பினும் தனது நம்பிக்கையை கைவிடாமல் 60வது முறை எழுதிய போது அவர் தேர்ச்சியடைந்துள்ளார்.
சுமார் 60 மணி நேரம், £1,400 யூரோ (RM8,259 ரிங்கிட்) அவர் இம்முயற்சியில் தேர்ச்சியடைய செலவிட்டுள்ளார்.
ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு முன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாம்.
அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வாகனத்தை ஓட்டும் தேர்வுக்குத் தகுதிபெற முடியும் என்பது அந்நாட்டின் விதியாகும்.
அவ்வகையில் பலமுறை தோல்வியைச் சந்தித்தாலும், தனது முயற்சியைக் கை விடாமல் தொடர்ந்த இவர், பாராட்டுக்கு உரியவரே.