இஸ்கந்தர் புத்ரி, மார்ச் 20 – 18 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான மதிப்பைக் கொண்ட சிகரெட்டுக்களை பொம்மைகளில் மறைத்துவைத்து கடத்துவற்கு திட்டமிட்ட கும்பலின் முயற்சியை ஜோகூர் சுங்கத்துறையினர் முறியடித்தனர். இரண்டு வெவ்வேறு சோதனை நடவடிக்கையின் மூலம் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதன்வழி சுங்க வரி செலுத்தப்படாத 21.7 மில்லியன் சிகரெட்டுகளை ஜோகூர் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மார்ச் 4 மற்றும் 13 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அந்த சிகரெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்ட தாக ஜோகூர் சுங்கத் துறையின் இயக்குனர் Aminul Izmeer Mohd Sohaimi தெரிவித்தார். அந்த சிகரெட்டுகளுக்கான சுங்க வரி 18.3 மில்லியன் ரிங்கிட்டாகும் என அவர் கூறினார். குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பொம்மைகளை கொண்டிருந்த 160 பெட்டிகளில் அந்த கடத்தல் சிகரெட்டுக்கள் இருந்ததாக Aminul தெரிவித்தார்.