Latestமலேசியா

8.68 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 520 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் பறிமுதல்; 17 பேர் கைது

காஜாங், ஜூன் 11 – பாதுகாப்பு நிறுவனத்தின் பெயரில் பல்வேறு வகையான போதைப் பொருட்களை விநியோகித்துவந்த கும்பலின் நடவடிக்கையை போலீசார் முறியடித்தனர், காஜாங் மற்றும் செராஸ் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட 9 வெவ்வேறு நடவடிக்கையில் அந்த கும்பலின் செயல் அம்பலமாகியுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதைப் பொருள் தயாரிக்கும் மற்றும் அந்தகும்பலின் சட்டவிரோத கிடங்காக செயல்பட்டு வந்த விட்டிலிருந்து 8.64 மில்லியன் மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அன்றைய தினம் நண்பகல் மணி 1.10 லிருந்து இரவு 9.30 மணிவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 18 முதல் 50 வயதுயை 17 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குனர் டத்தோ காவ் கோக் சின் ( Khaw Kok chin ) தெரிவித்தார். அவர்களில் அந்த கும்பலின் முதுகெலும்பாக இருந்த நபரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 பேரில் அறுவர் பாகிஸ்தான் ஆடவர்களும் இரண்டு வியட்னாமிய பெண்களும் அடங்குவர். இரு பெண்கள் உட்பட இதர அனைவரும் உள்நாட்டை சேர்ந்தவர்களாவர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!