![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-15-Feb-2024-04-01-PM-3192.jpg)
கோலாலம்பூர், பிப்ரவரி 15 – EV மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டும் சேவையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவர்கள், மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை உட்பட எரிசக்தி ஆணையம் மற்றும் ஊராட்சி மன்றங்களின், நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றி நடப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.
நாடு முழுவதுமுள்ள, EV மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டும் நிலையங்களின் சேவை மற்றும் செயல்பாடுகள் சீராக இருப்பதை உறுதிச் செய்ய, அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை எளிமையாக்கி ஒருங்கிணைக்க சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அச்சேவையை வழங்குனர்களுக்கான உரிமமும் அதில் அடங்குமென, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ பாடில்லா யூசோப் தெரிவித்தார்.
தற்சமயம் அந்த சேவையை வழங்குபவர்கள் எதிர்நோக்கும் சவால்களை அரசாங்கம் அறியும். அதன் அடிப்படையிலேயே அந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துணைப் பிரதமர் சொன்னார்.
அதன் வாயிலாக, மின்சார வாகனத் தொழில்துறையை மேம்படுத்த முடியும் என்பதோடு, சுற்றுசூழலை பாதிக்காமல் அதன் பாதுகாப்பையும் உறுதிச் செய்ய முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.