தாமான் மெலாவாத்தி, மார்ச் 3 – சிலாங்கூர், தாமான் மெலாவாத்தியில் மேம்பால நடைபாதையில் இருந்து குதிக்க முயன்றப் பெண்ணைக் தீயணைப்பு மீட்புத் துறைக் காப்பாற்றியது.
நேற்றிரவு 8.48 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பப இடம் விரைந்த தீயணைப்பு மீட்புத் துறை, அங்கு அப்பெண் தற்கொலை செய்துக் கொள்வதற்காக மேம்பாலத்தில் இருந்து குதிக்க முயற்சிப்பதைக் கண்டது.
எனினும், அப்பெண்ணிடம் மெல்லப் பேசி, சமாதானப்படுத்திய தீயணைப்பு மீட்புக் குழு, அவரை அங்கிருந்து இறக்கி பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வந்தது.
அப்போது மயக்கமான நிலையில் இருந்த 24 வயது அப்பெண்ணை, சிகிச்சைக்காக அம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.