கோலாலம்பூர், ஜூன் 6 – சிலாங்கூரில் நீர் விநியோகம் தடைப்பட்ட 7 பகுதிகளில் கட்டம் கட்டமாக நாளை அதிகாலை மூன்று மணி முதல் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும். Sungai Selangor நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைக்கும் பணிகள் ஏழு மணி நேரத்திற்குள் முழுமைபெற்றவுடன் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என Air Selangor நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மாலை மூன்று மணிவரை சீரமைப்பு பணிகள் 20 விழுக்காடு முடிவடைந்துவிடும் என்றும் நாளை அதிகாலை மூன்று மணியளவில் எஞ்சிய 80 விழுக்காடு பணிகள் முடிவடைந்தவுடன் நீர் விநியோகம் கட்டம் கட்டமாக கிடைக்கும் என கூறப்பட்டது.
வெள்ளிக்கிழமை நண்பகல் மணி 12-க்குள் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் முழுமையாக கிடைக்கும் என Air Selangor வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. Petaling, Klang , Shah Alam, Gombak, Kuala Lumpur, Hulu Selangor ஆகிய இடங்களில் பயனீட்டாளர்கள் நீர் விநியோக தடை நெருக்கடியை இன்று முதல் மூன்று நாட்களுக்கு எதிர்நோக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.