Latestமலேசியா

என் ஆட்சியில் பிரச்னைகள் உள்ளுக்குள்ளேயே தீர்க்கப்பட்டன; மகாதீர் பெருமிதம்

கோலாலம்பூர், மே-8 – பொது மக்கள் முன்வைக்கும் குறைகளை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட் விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமராக தாம் பதவி வகித்தக் காலத்தில் இது போன்ற பிரச்னைகள் அரசாங்கத்தின் உள்கட்டமைப்பில் அமைதியாக தீர்க்கப்பட்டன; ஆனால் இப்போது அவை பொது வாதங்களாக மாறி வருவதாக அந்த முதுபெரும் தலைவர் சொன்னார்.

“என் ஆட்சிக் காலத்தில், கோயில் அல்லது மசூதி அமைந்த இடங்களை உட்படுத்திய பிரச்சனைகள் இருந்தால், மக்கள் அரசாங்கத்திடம் புகார் அளித்து அதை அமைதியாக தீர்த்துக்கொள்ளலாம்; யாரும் அதனை பொதுவெளியில் சண்டையாக்க தேவையில்லை” என்றார் அவர்.

மலேசியர்களுக்கு இப்போது பேச்சு சுதந்திரம் இல்லையென்றும் மகாதீர் கூறிக் கொண்டார்.

அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்குக் கூட சுதந்திரம் இல்லை; அது எது செய்தாலும் நாம் ‘ஆமாம் சாமி போட வேண்டும்’. இல்லையென்றால் தனித்து விடப்படுவீர் என மகாதீர் குற்றம் சாட்டினார்.
நாட்டில் இப்போது இன அடிப்படையிலான பிளவுகள் அதிகரிக்கின்றன;

இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஒரே மொழி மற்றும் இன சார்பில்லா அரசியல் காரணமாக ஒற்றுமை நிலவுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் ஆதாயத்துக்காக தலைவர்கள் இனவாதத்தை மூட்டி விடுகின்றனர்; இந்த இன அரசியலால் நாடு இன்னும் பிரிந்துபோகும் அபாயம் உள்ளதாக மகாதீர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், மலாய் கட்சிகள் இனம் சார்ந்தவை அல்ல என அவர் வாதிட்டார்.

இது ஒரு மலாய் நாடு – ‘Tanah Melayu’. மலாய் மொழி மற்றும் கலாச்சாரத்தை ஏற்கும் யாரும் மலாய் கட்சிகளில் சேர்ந்துக்கொள்ளலாம். இது இனம் குறித்து அல்ல, தேசிய அடையாளத்தைப் பற்றியது என FMT-யிடம் அவர் கூறினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!