
செகாமாட், மே-17 – ஜோகூர், செகாமாட் பாருவில் 24 மணி நேர முஸ்லீம் உணவகமொன்றுக்கு தனது வளர்ப்பு நாயைக் கொண்டு வந்த ஆடவரை, விசாரணைக்காகப் போலீஸ் தேடி வருகிறது.
அவ்வகையில் செகாமாட் நகராண்மைக் கழகத்துடன் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படுமென, மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் சாம்ரி மரின்ஸா தெரிவித்தார்.
இந்நிலையில், அவ்வுணவகப் பணியாளரை விசாரித்ததில், நாய்க் குட்டி அமர வைக்கப்பட்ட நாற்காலியை அவர்கள் தூக்கி வீசி விட்டது தெரிய வந்ததாக அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட நபர் பக்கத்து நாற்காலியில் நாய்க் குட்டியை அமர வைத்திருந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் முன்னதாக வைரலாகின.
இதனால் வலைத்தளங்களில் பலர் குறிப்பாக முஸ்லீம்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
நாய்களை அவர்கள் அசுத்தமானவையாப் பார்ப்பது குறிப்பிடத்தக்கது.