
ஷா ஆலாம், மே-20 – சிலாங்கூர் கிள்ளான் பண்டார் பொத்தானிக்கில் 24 மணி நேர பல்பொருள் விற்பனைக் கடையில் கொள்ளையிட்ட வேலையில்லாத ஆடவன், சில மணி நேரங்களிலேயே போலீஸிடம் சிக்கினான்.
கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கடையின் உரிமையாளர் போலீஸில் புகார் செய்த நிலையில், இரவு 8.30 மணிக்கெல்லாம் 37 வயது அவ்வாடவன் பிடிபட்டான்.
தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரம்லி காசா அதனை உறுதிப்படுத்தினார்.
Screwdriver எனப்படும் திருப்புளி முனையில் அவன் கொள்ளையிட்டுள்ளான்.
கல்லாப்பெட்டி மேசையை ஓங்கி குத்தியவன் அதிலிருந்த பணம் அனைத்தையும் எடுத்துத் தருமாறு கடைப் பணியாளரை மிரட்டினான்.
பயத்தில் 3,000 ரிங்கிட் ரொக்கத்தையும் பணியாளர் எடுத்துகொடுத்தார்.
இந்நிலையில் கொள்ளையனுக்கு ஏற்கனவே 6 குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இவன் கைதானதில், தென் கிள்ளானில் 4 கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வுக் காணப்பட்டதாகவும் ரம்லி சொன்னார்.