Latestமலேசியா

புக்கிட் காயு ஈத்தாம் எல்லையில், விலைமிக்க பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டார், மே 28 – புக்கிட் காயு ஈத்தாம் நுழைவாயிலில் மேற்கொண்ட பரிசோதனையில், 250,000 ரிங்கிட் மதிப்பிலான காலணிகள் மற்றும் பைகளை, PGAவுடன் இணைந்து, மலேசிய வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு பறிமுதல் செய்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் போலி வர்த்தக முத்திரைகள் இருப்பது, சோதனை நடவடிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தம் 387 பைகள், பல்வேறு பிராண்டுகளின் காலணிகள் மற்றும் இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யபட்ட நிலையில், இக்குற்றம் வர்த்தக முத்திரைகள் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ளதென கெடா அலுவலக இயக்குனர் நிஜாம் ஜமாலுடின் கூறியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் போலி பொருட்களை விற்க வேண்டாம் என்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் நிஜாம் அறிவுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!