
போர்ட்டிக்சன், மே 29 – கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், போர்ட்டிக்சன் ஜிமாவிலுள்ள வீடொன்றில், அபாயகரமான கழிவுகளைச் சட்டவிரோதமாக கொட்டிய குற்றச்சாட்டில் Nature Energy Products Sdn Bhd-இன் இயக்குனர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதென்று மாநில சுற்றுச்சூழல் துறை (DOE) அறிவித்துள்ளது.
62 வயதான எஸ். சிவனாதிரன் மற்றும் 47 வயதான சான் குவாய் சூன் ஆகியோர் நீதிபதிபதியின் முன் தங்களது குற்றங்களை மறுத்துள்ளனர்.
குற்றத்தைத் ஆராய்ந்த நீதிபதி, அவ்விரு இயக்குனர்களுக்கும் தலா 9,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்துள்ளார்.
சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ள அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 100,000 ரிங்கிட் முதல் 10 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம்.