Latestமலேசியா

டெலிகிராமில் ஆபாச படங்களை விற்பனை செய்த ஆடவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், மே 30 – டெலிகிராமில் ஆபாசப் படங்களை விநியோகித்ததற்காக வேலையில்லாத நபருக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. ஆபாசப் படங்களை விற்பனை செய்தது மற்றும் விநியோகித்தது தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து Ammar Azaruddin என்பவருக்கு மாஜிஸ்திரேட் ஐனா அசாஹ்ரா அரிஃபின்
( Aina Azahra Ariffin ) 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தார். இதனை செலுத்தத் தவறினால் 4 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி Ammar ருக்கு உத்தரவிடப்பட்டது.

ஏப்ரல் 9 ஆம் தேதி ஆபாச உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் டெலிகிராம் சேனல்களுக்கான இணைப்புகளைக் கொண்ட ஒரு வலைத்தளத்தை ஒரு போலீஸ்காரர் கண்டுபிடித்தார். அந்த உள்ளடக்கத்தை அணுக பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!