
கோலாலம்பூர், மே 30 – டெலிகிராமில் ஆபாசப் படங்களை விநியோகித்ததற்காக வேலையில்லாத நபருக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. ஆபாசப் படங்களை விற்பனை செய்தது மற்றும் விநியோகித்தது தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து Ammar Azaruddin என்பவருக்கு மாஜிஸ்திரேட் ஐனா அசாஹ்ரா அரிஃபின்
( Aina Azahra Ariffin ) 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தார். இதனை செலுத்தத் தவறினால் 4 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி Ammar ருக்கு உத்தரவிடப்பட்டது.
ஏப்ரல் 9 ஆம் தேதி ஆபாச உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் டெலிகிராம் சேனல்களுக்கான இணைப்புகளைக் கொண்ட ஒரு வலைத்தளத்தை ஒரு போலீஸ்காரர் கண்டுபிடித்தார். அந்த உள்ளடக்கத்தை அணுக பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.