
ஷா அலாம், ஜூன் 12 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, சாலையில் கண்டெடுத்த பணப்பையை, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு, வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளன.
சாலையோரத்தில் கிடந்த அந்த பணப்பையை, பத்திரமாக உரிமையாளரின் விலாசத்தை கண்டுபிடித்து அண்டை வீட்டாரிடம் ஒப்படைத்தோடு மட்டுமல்லாமல், அப்பணப்பை அவர்களின் கைகளுக்கு சேர்ந்து விட்டதா என்று ‘த்ரெட்டில்’ விசாரித்த ஃபித்ரி (Fitri) என்ற நபரின் செயல் வலைதளவாசிகளை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கணவன் மனைவி இருவர், ஷா ஆலம், பிரிவு 7 இல் உள்ள ‘பெட்ரோல்’ நிலையம் ஒன்றில், வாகனத்திற்கு எண்ணெய் ஊற்றி விட்டு, வீடு திரும்பும் வழியில் பணப்பை தொலைந்ததை அறிந்துள்ளனர்.
அத்தம்பதியினர், 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிறகு தங்களது பணப்பை காரின் கூரையிலிருந்து பறந்து விட்டதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உரிமையாளர்கள் பணப்பையைத் திரும்ப கொடுத்த ஃபித்ரிக்கு தங்களது உளமார்ந்த நன்றியினை த்ரெட்டில் தெரிவித்து கொண்டுள்ளனர்.