
ஜோகூர் பாரு, ஜூன் 19 – நேற்றிரவு, தாமான் முத்தியாரா ரினியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தவித்துக் கொண்டிருந்த 200 கிலோ எடையுள்ள ஆடவரைத் தீயணைப்பு வீரார்கள் வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளனர்.
46 வயதான அந்நபரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரால் அவ்விடத்தை விட்டு நகரமுடியவில்லை என்றும் உடனே தீயணைப்பு துறையினரைத் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் ஸ்கூடாய் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி பைசல் இஸ்மாயில் கூறியுள்ளார்.
சுமார் 7 நிமிடங்கள் கழித்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர்கள், அவரை மாடியிலிருந்து இறக்கி, ஆம்புலன்சில் ஏற்றி சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துமனையில் அந்த ஆடவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.