
அலோர் ஸ்டார், ஜூன்-24- கெடாவில் நேற்று மாலை பெய்த கனமழையுடன் வீசிய புயல் காற்றினால் பெரும் சேதம் ஏற்பட்டது.
சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்த வேளை, வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.
கோத்தா ஸ்டார், பெண்டாங், குபாங் பாசு, பொக்கோக் செனா, பாடாங் தெராப், குவாலா மூடா ஆகிய மாவட்டகள் அதில் பாதிக்கப்பட்டன.
எனினும் யாரும் காயமடைந்ததாகவோ அல்லது உயிர் சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை.
மொத்த சேத விவரங்கள் குறித்தும் எதுவும் தெரிய வரவில்லை.
கெடாவில் பல மாவட்டங்கள், கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாநிலங்களுக்கு, மலேசிய வானிலை ஆய்வு மையமான MET Malaysia முன்னதாக இடிமின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.