
கோலாலாம்பூர், ஜூன்-25 – அண்மையில் 4 நாட்கள் இடைவெளியில் கோலாலம்பூர் பிரிப்ஃபீல்ட்ஸ் மற்றும் செராசில் நிகழ்ந்த 2 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கும் தொடர்பில்லை.
செராஸ் போலீஸ் தலைவர் துணை ஆணையர் அய்டில் போல்ஹசான் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
என்றாலும், செராஸ் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை இன்னும் போலீஸ் அடையாளம் காணவில்லை என்றார் அவர்.
செராஸ், ஜாலான் லோக் இயூவில் உள்ள பேரங்காடி முன்புறம் ஒருவர் சுட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், முகமூடி கும்பலை போலீஸ் இன்னமும் தேடி வருவதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுவரை 18 பேரது வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ள போதிலும், சந்தேக நபர்களை அடையாளம் காண்டும் அளவுக்கு துல்லித துப்புக் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டது.
பிரிக்ஃபீல்ட்ஸ் மற்றும் செராஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குண்டர் கும்பல் அம்சங்களைக் கொண்டிருப்பதாக, போலீஸின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜூன் 13-ஆம் தேதி பிரிக்ஃபீல்ட்ஸ், துன் சம்பந்தன் சாலையில் உள்ள ஓர் உணவகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டு, இருவர் காயமடைந்தனர்.