Latestமலேசியா

முத்து நெடுமாறனின் வாழ்க்கை சம்பவங்களை விவரிக்கும் “உரு” நூல் & புதிய முரசு அஞ்சல் பதிப்பு வெளியீடு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29 – கடந்த வெள்ளிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மண்டபத்தில், மலேசியக் கணிஞரும் எழுத்துருவியல் துறை நிபுணருமான திரு, முத்து நெடுமாறன் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீடு கண்டுள்ளது.

விழாவின் பிரதான மற்றொரு அங்கமாக, தமிழ் நாட்டின் பிரபல எழுத்தாளர் கோகிலா எழுதிய முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களையும் கணினி உலகில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் விவரித்து ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய ஊடகத்தில் எழுதிய கட்டுரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘உரு’ என்ற நூலும் வெளியீடு கண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருளை நிகழ்ச்சிக்கு வருகை தந்த 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் முரசு அஞ்சலின் பயனர்களை வைத்தே வெளியீடு செய்துள்ளது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

‘அறிவார்ந்த உள்ளீடுகள்’ என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் முரசு அஞ்சல் மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய உள்ளிடுகள் குறித்து விளக்கம் தந்த நிலையில் முரசு அஞ்சலின் தொடக்கம், அதன் தொடர்ச்சியான பயணம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து
விளக்கமளித்துள்ளார்.

‘அழகு தமிழ் எழுத்துருக்கள்’ என்ற அங்கத்தில் தமிழ் எழுத்துருக்களின் முக்கியத்துவத்தையும் அவற்றின் அத்தியாவசியத்தையும் எடுத்துரைத்த முத்து நெடுமாறன் புதிய மென்பொருளில் மேலும் கூடுதலான அழகான எழுத்துருக்கள் இதற்கென உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரு’ முதல் நூலை சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ வி.எல்.காந்தனிடமும் இரண்டாவது நூலை, தனது முரசு அஞ்சல் தமிழ் மென்பொருளையும், எழுத்துருக்களையும் முதன் முதலில் பயன்படுத்திய ‘மயில்’ பத்திரிகைக்கும் திரு. முரசு நெடுமாறன் வழங்கியுள்ளார்.

‘உரு’ நூல் வெளியீட்டு விழாவில் கல்வி அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரி பி.எம்.மூர்த்தி அவர்களும், பேராசிரியர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் அவர்களும் முரசு அஞ்சலோடு தங்களுக்கிருக்கும் அனுபவங்களைப் பற்றி உரையாற்றியுள்ளனர்.

மேலும் இந்தக் கட்டுரைத் தொடரை தான் எழுதுவதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியதோடு அதன் உள்ளடக்கங்களில் திருத்தங்கள் செய்து இந்த நூல் சிறப்புற உருவாக, ஆதரவு தந்த முத்து நெடுமாறனுக்கு கோகிலா தமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!