
உத்தரபிரதேசம், ஜூன் 29 – உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண் அண்மையில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில திகிலூட்டும் விவரங்கள் செளிவந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்னால், அவரது மாமனாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீட்டிற்கு வெளியே உள்ள குழியில் மாமனாரும் அபெண்ணின் கணவரும் புதைத்துள்ளனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை அக்கிழவன்
போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான் என்று அறியப்படுகின்றது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அப்பெண் காணாமல் போய்விட்டதாக போலீசாரிடம் சொல்லப்பட்டவை யாவும் பொய்யான கூற்றுகள் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
மாமியாரரை வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டு இக்கொடூர செயலை செய்த மாமனார் தற்போது போலீஸ் தடுப்பு காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.