
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-13-பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் ஏற்பட்ட தீ விபத்தில், மூத்த வழக்கறிஞர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Lebuh King சாலையில் உள்ள ஒரு சட்ட அலுவலகம் இன்று பிற்பகலில் தீப்பற்றியது.
அதில், 88 வயது வழக்கறிஞர் டத்தோ San Markan, 60 வயது குமாஸ்தாவான Chandra Binwani Jiwatram இருவரும் உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், தீயினால் ஏற்பட்ட அடர்த்திமான புகையை சுவாசித்ததன் காரணமாக அவ்விருவரும் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
இருவரின் உடல்களும் மேல் பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.



