Latestமலேசியா

சுங்கைப் பட்டாணியில் கோர விபத்துக்குப் பின் துப்பாக்கிபோன்ற பொருள் கண்டுபிடிப்பு

சுங்கைப் பட்டாணி, ஜூன்-12-சுங்கைப் பட்டாணி, Laguna Merbok கிற்கு அருகேயுள்ள, Jalan Lencongan Barat சாலையில் நேற்றிரவு நடந்த ஒரு கோரமான விபத்தில், சம்பந்தப்பட்ட காரில் துப்பாக்கி போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது.

இரவு 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் தாமான் ரியாவைச் சேர்ந்த 67 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் நிசான் கிராண்ட் லிவினா கார் ஆகியவை சம்பந்தப்பட்டிருந்ததாகவும், அவை அமான் ஜெயாவை நோக்கி ஒரே திசையிலிருந்து வந்துகொண்டிருந்ததாக நம்பப்படுவதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் ( Hanyan Ramlan ) கூறினார்.

தொடக்கக் கட்ட விசாரணையில், 37 வயதான கார் ஓட்டுநர் மற்றும் 35 வயதான முன் இருக்கை பயணி ஆகியோர் போதைப்பொருளில் தொடர்பு இருக்கும் சாத்தியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஓட்டுநருக்கு ஒரு குற்றப் பதிவு உட்பட 16 முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன, அதே நேரத்தில் பயணிக்கு போதைப்பொருள் தொடர்பான ஏழு குற்றப் பதிவுகள் இருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Hanyan சுட்டிக்காட்டினார்.

விசாரணைக்கு உதவுவதற்காக அவ்விருவருக்கு எதிராக தடுத்துவைக்கும் உத்தரவு பெறப்படவுள்ளது.

1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்சன் 41 (1) மற்றும் செக்சன் 44 (1) (A) பிரிவின் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!