Latestஇந்தியா

3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு; தமிழக பெண் அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு மகிழ்ச்சி அறிவிப்பு!

சென்னை, ஆகஸ்ட் 19 — முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை மட்டுமல்ல… இனி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரசு ஊழியர்களுக்கும் முழுமையாக ஓராண்டு மகப்பேறு விடுப்பு!

தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களின் குடும்பப் பொறுப்பையும் பணிச்சூழலையும் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இந்த முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

இதுவரை முதல் இரண்டு குழந்தைகளுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு கிடைத்து வந்தது. இனி அந்த வேறுபாடு நீக்கப்பட்டு, மூன்றாவது குழந்தைக்கும் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படவுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

குழந்தைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு மகப்பேறு சலுகையில் வேறுபாடு இருக்கக் கூடாது என்ற விவாதம் எழுந்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவது கர்ப்பத்திற்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களாகக் கட்டுப்படுத்திய அரசாணையையும் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது அரசே விதிமுறையை மாற்றி, மூன்றாவது குழந்தைக்கும் முதல் இரண்டு குழந்தைகளுக்குச் சமமான மகப்பேறு விடுப்பை வழங்க முடிவு செய்துள்ளது.

ஒரு குழந்தைக்கு ஒரு விதி, மூன்றாவது குழந்தைக்கு வேறு விதி என்ற நிலையை மாற்றி, தாய்மையை சமமாக அணுகும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!