Latestமலேசியா

Pearl Hill நாய் தாக்குதல் சம்பவம்: வளர்ப்பு நாயின் உரிமத்தை இரத்துச் செய்த பினாங்கு மாநகர மன்றம்

தஞ்சோங் பூஙா, செப்டம்பர்-2-பினாங்கு, தஞ்சோங் பூஙாவில் வீடற்ற நாயைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, வளர்ப்பு நாய் ஒன்றின் உரிமத்தை பினாங்குத் தீவு மாநகர மன்றம் (MBPP) இரத்துச் செய்துள்ளது.

​ஆகஸ்ட் 29-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், Pit Bull எனக் கூறப்படும் பெரிய அளவிலான வளர்ப்பு நாய் ஒன்று ‘டிம்’ என்ற வீடற்ற நாயைக் கடித்துத் தாக்கியது சமூக வலைத் தளங்களில் வைரலானது.

​இதனைத் தொடர்ந்து, அந்த நாயைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் உரிமத்தை இரத்துச் செய்துள்ளனர்.

மேலும், நாய் கடித்ததற்காக உரிமையாளருக்கு 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

​சம்பவம் நடந்தபோது நாயை அழைத்துச் சென்றது தாம் இல்லை என அதன் பதிவுச் செய்யப்பட்ட உரிமையாளர் கூறியுள்ள நிலையில், அது குறித்து போலீஸ் புகார் செய்யுமாறு மாநகர மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2015 ​விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆதாரம் தேவைப்படும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட நாய் தொடர்ந்து MBPP பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!