கோலாலம்பூர், மார்ச் 26 – அண்மையில் பெட்டாலிங் ஜெயா, Bandar Sunway KK Mart விற்பளை மையத்தில் Allah பதத்தைக் கொண்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பில் நாடு தழுவிய நிலையில் 178 புகார்களை போலீசார் பெற்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் முகநூலில் பதிவிடப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்தும் 30 புகார்கள் பெறப்பட்டதாக உள்துறை துணையமைச்சர் Shamsul Anuar Nasarah தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சு கடுமையாக கருதுவதோடு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து KK Mart விற்பனை நிலையங்களில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பிரச்னைக்குரிய அந்த காலுறைகளை KK Mart மீட்டுக்கொண்டது. இத்தகைய சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக KK Mart நிர்வாகம் மற்றும் அதன் விற்பனையாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டதாகவும் Shamsul நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.