![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-12-Dec-2023-03-34-PM-7284.jpg)
கோலாலம்பூர், டிசம்பர் 12 – மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான B2 ஓட்டுனர் உரிமத்தை, தானியங்கி முறையில் B உரிமமாக தரம் உயர்த்தும் பரிந்துரையை, JPJ – சாலை போக்குவரத்து துறையின் உதவியுடன் போக்குவரத்து அமைச்சு ஆராய்கிறது.
சாலை பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டிகளின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த பரிந்துரை ஆராயப்படுவதாக, போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா தெரிவித்தார்.
B2 உரிமத்தை பயன்படுத்தும் சக்தி குறைந்த மோட்டார் சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில், B உயர் ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் கட்டுமான அமைப்பு மற்றும் மாறுபட்ட வேக கட்டுப்பாடு, தொழில்நுட்பம் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய உள்ளதாக ஹபிபொல்லா சொன்னார்.
B உயர் ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இயக்க கூடுதல் திறனும், சக்தியும் இருப்பது அவசியம் என்பதையும், மேலவை கேள்வி பதில் நேரத்தின் போது துணையமைச்சர் சுட்டிக்காட்டினார்.